tamilnadu

img

கூகுள் பே, அமேசான் பே உள்ளிட்ட நிறுவனங்களுக்கு 24 மணி நேரம் கெடு - ரிசர்வ் வங்கி

இந்தியாவில் நடைபெறும் பணப்பரிமாற்றம் தொடர்பான தரவுகளை, வெளிநாட்டு சர்வர்களில் சேமித்து வைத்திருக்கும் கூகுள் பே, அமேசான் பே உள்ளிட்ட நிறுவனங்கள் 24 மணி நேரத்துக்குள் உள்நாட்டுக்கு கொண்டு வர வேண்டும்  ரிசர்வ் வங்கி கெடு விதித்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு, இந்தியாவில்  நடைபெறும் பணப்பரிமாற்றம் தொடர்பான தரவுகளை உள்நாட்டு சர்வர்களில் தான் சேமித்து வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. 

ஆனால் கூகுள் பே, அமேசான் பே போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநாட்டு சர்வர்களில் இந்தியாவில் நடைபெறும் பணப்பறிமாற்றம் தொடர்பான தரவுகளை சேகரித்து வருகின்றன. இந்நிலையில் அந்நிறுவனங்கள், வெளிநாட்டு சர்வர்களில் சேமித்து வைத்திருக்கும் தரவுகளை 24 மணி நேரத்துக்குள் உள்நாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கெடு விதித்துள்ளது.

;